Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 323 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
323ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 6
சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்–3-10-6
சித்திரக்கூடத்து ,Siththirak Koodaththu - சித்திரகூட பர்வதத்தில்
இருப்ப,Irup - நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில்
சிறு காக்கை,Siru Kaakkai - சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன்
முலை தீண்ட,Mulai Theenda - (உமது) திரு முலைத் தடத்தைத் தீண்ட
அத்திரமே கொண்டு,Aththiramae Kondu - (அதனாற் சீற்றமுற்ற ஸ்ரீராமன்) ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து
எறிய,Eriya - பிரயோகிக்க,
அனைத்து உலகும்,Anaiththu Ulagum - (அக் காகம் அதற்குத் தப்புவதற்காக) உலகங்களிலெல்லாம்
திரிந்து ஓடி,Thirindhu Oadi - திரிந்து ஓடிப் போய்
வித்தகனே,Viththagane - (தப்ப முடியாமையால் மீண்டு இராமபிரானையே அடைந்து) “ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
இராமா,Raamaa - ஸ்ரீ ராமனே!
ஓ,O - ஓ !!
நின் அபயம்,Nin Abayam - (யான்) உன்னுடைய அடைக்கலம்”
என்று அழைப்ப,Endru Azhaippa - என்று கூப்பிட
அத்திரமே,Aththiramae - (உயிரைக் கவர வேணுமென்று விட்ட அந்த) அஸ்த்ரமே
அதன் கண்ணை,Adhan Kannai - அந்தக் காகத்தின் ஒரு கண்ணை மாத்திரம்
அறுத்ததும்,Aruththadhum - அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்