| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3239 | திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -இவள் போகச் சொன்ன இடத்திலும் போகாதே இவளைப் பார்த்து மந்த ஸ்மிதம் பண்ணின அதிலே சிதில சிந்தையாய் எங்களை நாழியாதே உன் அபி மேதைகள் இருந்த பரிசாரத்திலே போய் அவர்கள் வருகைக்கு ஈடாக இருந்து குழலை ஊது என்கிறாள்.) 2 | போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்; தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2 | போகு நம்பீ!,Pogu Nambi - பிரானே! அப்பால்போ உன்,Un - உன்னுடைய தாமரை புரை கண் இணையும்,Thamarai Purai Kan Inaiyum - தாமரைபோன்ற கண்களிரண்டும் செம் வாய் முறுவலும்,Sem Vai Muruvalum - சிவந்த அதர்தில் நின்றும் தோன்றுகிற சிரிப்பும் ஆகுலங்கள் செய்ய,Aagulangal Seyya - வீணாக எங்களை ஆகுலப்போவதற்கே அழிதற்கே,Azhitharkae - அதனால் சிதிலப்பட்டுப் போவதற்கே நோற்றோமே,Noatrome - இட்டுப் பிறந்தவர்களன்றோ நாங்கள் நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது அருளை அநுபவிக்கப் பிறந்த தோகை மா மாயிலார்கள்,Thogai Maa Mayilargal - தோகைவிரித்த நல்ல மயில்போன்ற கூந்தலையுடைய மாதர்கள் ஓசை செவி வைத்து எழ,Osai Sevi Vaithu Ezha - (வேணுகானத்தின்) ஓசையைக்கேட்டு எழுந்து வரும்படியாக ஆகள் போக விட்டு,Aagal Poga Vittu - பசுக்களை மேய்க்கப் போகவிட்டு போய் இருந்து,Poy Irundhu - அங்கேறப் போயிருந்து குழல் ஊது,Kuzhal Oothu - புல்லாங்குழலை ஊதிக் கொண்டுகிட. |