திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 324 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
324பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 7
மின்னொத்த நுண்ணிடையாய் மெய் யடியேன் விண்ணப்பம் பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓரடையாளம்–3-10-7
பதவுரை Show / Hide
மின் ஒத்த,Min Oththa - மின்னலைப் போன்ற
நுண் இடையாய்,Nun Idaiyaai - மெல்லிய இடையை யுடையவளே!
மெய் அடியேன்,Mei Adiyen - உண்மையான பக்தனாகிய எனது
விண்ணப்பம்,Vinnappam - விண்ணப்பத்தை (க் கேட்டருள வேணும்;)
பொன் ஒத்த,Pon Oththa - பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய)
மான் ஒன்று,Maan Ondru - (மாரீசனாகிய) ஒருமான்
புகுந்து,Pugundhu - (பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து
இனிது விளையாட,Inidhu Vilaiyaada - அழகாக விளையாடா நிற்க,
நின் அன்பின் வழி நின்று,Nin Anbin Vazi Nindru - (அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்) உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று
சிலை பிடித்து,Silai Pitiththu - வில்லை யெடுத்துக் கொண்டு
எம்பிரான்,Empiraan - இராமபிரான்
ஏக,Eaga - அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள,
பின்னே,Pinnae - பிறகு
அங்கு,Angu - அவ் விடத்தில்
இலக்குமணன்,Ilakkuamanan - இளைய பெருமாளும்
பிரிந்ததும்,Pirindhadhum - பிரிந்ததுவும் ஓர் அடையாளம்