| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3243 | திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -மேனாணித்துக் குழமணனை எடுத்த அவனைக் குறித்து உன்னுடைய ஈச்வரத்வம் எங்களோடு காட்டாதே அதுக்குத் தகுவாரோடே காட்டு -என்கிறாள் .) 6 | குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை; பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்? அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்; கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6 | நம்பீ,Nambi - பிரானே! குழகி,Kuzhagi - லீலாரஸம் கொண்டாடி எங்கள் குழமணன் கொண்டு,Engal Kuzhaman kondu - எங்களுடைய மரப்பாச்சியை யெடுத்துக் கொண்டு கோயின்மை செய்து,Koyinmai Seydhu - கேட்பாரற்ற செயல்களைச் செய்வதனால் கன்மம் ஒன்று இல்லை,Kanmam Ondru Illai - உனக்கு ஒரு காரியமும ஸித்தித்ததாகாது யாம் பழகி இருப்போம்,Yaam Pazhagi Irupom - நாங்கள் வெகுநாளாகவே உம்மோடு பழகி உமது யோக்யதைகளைத் தெரிந்துகொண்டிருக்கின்றோம். இத் திரு அருள்கள் பரமே,Idhu Thiru Arulgal Paramae - உம்முடைய ஆசைப்பெருக்கான காரியங்களுக்கு. நாங்கள் இலக்காகப் போருமோ (இவை எங்களால் தாங்க முடியா) இ உலகு மூன்றுக்கும் அழிகியார்,I Ulaku Moondrukkum Azhigiyar - இம்மூவுலகத்தினுள்ளும் அழகிற்சிறந்தவர்களாயும் தேவிமை தருவார்,Thevimaai Tharuvaar - உமக்குத் தேவிகளாயிருக்கத் தகுந்தவர்களாயுமுள்ள மாதர்கள் பலர் உளர்,Palar Ular - பலருண்டு, கழகம் ஏறேல்,Kazhagam Erel - எங்கள் திரளிலே பலாத்காரமாகப் புகவேண்டா கன்மம்,Kanmam - இப்படிப்பட்ட செய்கையனது உனக்கும் இளைது,Unakkuum Ilaiuthu - உன்மனத்தால் பார்த்தாலும் பால்ய லௌல்யமாகத் தோற்றக்கூடியதே. |