Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3245 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3245திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும் பெருமையை யுடைய உனக்கு எங்களை ஸ்பர்சித்துகே கையில் பாவையைப் பறிக்கிற இது கார்யம் அன்று என்கிறாள்.) 8
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8
யாவையும் யாவரும்,Yaavaiyum Yaavarum - அசேதனப்பொருள்களும் சேதனைப்பொருள்களுமான ஸகலத்தையும்
பிணக்கி,Pinakki - ஸம்ஹாரதசையிலே ராம்ரூப லிபாகமில்லாதபடி ஒன்றாகப் பிசிறிவைத்து (பிறகு ஸ்ருஷ்டிகாலத்திலே)
பிழையாமல்,Pizhaiyaamal - ஒருவருடைய கரும்மும் மாறிப் போகாதபடி
பேதித்தும்,Pedithum - தேவயானி மநுஷ்ய யோனி திர்யக்யோனி முதலியபோதங்களைப் பண்ணினவிடத்தும்
பேதி யாதது,Pethi Yaadhathu - அவற்றின்கணுள்ள தோஷங்களால் ஸ்வரூபத்துக்குச் சேதம் வராதபடியான
ஓர் கணக்கு இல்கீர்த்தி வெள்ளம்,Oru Kanakku Ilkeerthi Vellam - அத்விதீய நிர்வதிக கீர்த்தி ப்ரவாஹத்தையும்
கதிர்ஞானம்,Kathirgnanam - ஸங்கல்பருபஜ்ஞானத்தையும்
மூர்த்தியையும்,Moorthiyaiyum - வடிவாகைவுடையவனே
எம் தோழிமார்,Emm Thozhimaar - எமது தோழிமார்கள்
எம்மை இணக்கி,Emmai Inakki - எங்களை இசைவித்து
விளையாட போதுமின் என்ன,Vilaiyada Podhumin Enna - விளையாட வாருங்கோள் என்றழைக்க
போந்தோமை,Poandomai - (நீ இங்கிருப்பது அறியாமே வந்த எங்களை)
நீ உணக்கி வளைத்தால்,Nee Unakki Valaithaal - நீ நெருக்கித் தகைந்தால்
உகவாதவர் என் சொல்லார்,Ugavaadhavar En Chollaar - வேண்டாதார் என்னதான் சொல்லமாட்டார்கள்.