திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3251 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3251திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய கல்யாண குணங்களை ஒழிய ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார் -நகரமும் நாடுகளும்-சிறுமை பெருமையாலே விரோதம் சொல்லிற்று / நிலனாய் விசும்பாய்ச் -ரூபியான நிலனும் அரூபியான விசும்புமாய் / புகர்கொள் கீர்த்தி-என்றது திரு நாட்டில் காட்டில் திரு விண்ணகரிலே புகுந்த பின்பு அவனுடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படி) 3
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச் சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான் புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3
பதவுரை Show / Hide
நகரமும்,Nagaramum - நகரத்தில் உள்ளவர்களும்
நாடுகளும்,Naadugalum - நாட்டிலுள்ளவர்களுமாய்
ஞானமும்,Gnanamum - அறிவும்
மூடமும் ஆய்,Moodamum aai - அறியாமையுமாய்
நிகர் இல் சூழ் சுடர் ஆய்,Nigar il soozh sudar aai - ஒப்பற்ற பரந்த ஒளியும்
இருளாய்,Irulaai - இருளுமாய்
நிலன் ஆய்,Nilanaai - நிலமும்
விசும்பு ஆய்,Visumbuaai - ஆகாசமுமாய்
சிகர,Sikara - சிகரங்களையுடைய
மாடங்கள் சூழ்,Maadangal soozh - மாடங்கள் சூழ்ந்த
திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரை
சேர்ந்த பிரான்,Serndha piraan - சேர்ந்த ஸ்வாமியின்
புகர் கொள்,Pugar kol - ஒளி பொருந்திய
கீர்த்தி அல்லால்,Keerthi allaal - குணகீர்த்தியைத் தவிர
யாவர்க்கும்,Yaavarkkum - எவருக்கும்
புண்ணியமே,Punniyame - உய்வதற்குரிய புண்ணியம்
இல்லை,Illai - வேறு இல்லை