Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 327 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
327ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 10
வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.–3-10-10
வார் ஆரும்,Vaar Aarum - கச்சு அணிந்திருக்கைக்கு உரிய
முலை,Mulai - முலையையும்
மடலாள்,Madalaal - மடப்பத்தை யுமுடையவளான
வைதேவிதனை,Vaithevidhanai - ஸீதா பிராட்டியை
கண்டு,Kandu - பார்த்து
சீர் ஆரும்,Seer Aarum - சக்தியை யுடையவனான
திறல்,Thiral - சிறிய திருவடி
தெரிந்து,Therindhu - (பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு.
உரைந்து,Uraindhu - (பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன
அடையாளம்,Adaiyaalam - அடையாளங்களை (க் கூறுவதான)
பார் ஆளும் புகழ்,Paar Aazhum Pugazh - பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய்
புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
பட்டர்பிரான் பாடல்,Pattarpiraan Paadal - பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை
வல்லார்,Vallaar - ஓத வல்லார்கள்
ஏர் ஆரும் வைகுந்தத்து,Er Aarum Vaikunthaththu - வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில்
இமையவரோடு,Imaiyavarodu - நித்ய ஸூரிகளோடு
இருப்பார்,Irupaar - கோவையா யிருக்கப் பெறுவார்கள்.