Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 328 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
328ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 1
கதிராயிர மிரவி கலந் தெரித்தா லொத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
அதிரும் கழற் பொரு தோள் இரணிய னாகம் பிளந்து அரியாய்
உதிரமளைந் தகையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர்–4-1-1
கதிர்,Kathir - (எண்ணிறந்த) கிரணங்களை யுடைய
ஆயிரம் இரவி,Aayiram Iravi - ஆயிரம் ஆதித்யர்கள்
தறித்தால் ஒத்தத,Thariththaal Oththadha - ஜ்வலித்தாற்போல் (மிகவும் பளபளவா நின்றுள்ள)
நீள் முடியன்,Neel Mudiyan - நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான
இராமன்,Raaman - இராமபிரான்
இருக்கும் இடம்,Irukkum Idam - எழுந்தருளியிருக்குமிடத்தை
நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;)
அதிரும்,Athirum - (கல கல் என்று) ஒலி செய்யா நின்றுள்ள
கழல்,Kazhal - வீரக் கழலையும்
பொரு தோள்,Poru Thol - போர் செய்யப் பதைக்கிற தோள்களையுமுடைய
இரணியன்,Iraniyan - ஹிரண்யாஸுரனுடைய
ஆகம்,Aagam - மார்பை
அரி ஆய்,Ari Aay - நரஸிம்ஹ ருபியாய்க் கொண்டு
பிளந்து,Pilandhu - கீண்டு
உதிரம் அளைந்து,Uthiram Alainthu - (அதனாலுண்டான) ரத்தத்தை அளைந்த
கையோடு,Kaiyodu - கைகளோடு கூடி
இருந்தானை,Irundhaanai - (சீற்றந்தோற்ற) எழுந்தருளியிருந்த நிலைமையில் (அவனை)
உள்ள ஆ உண்டார் உளர்,Ulla Aa Undaar Ular - உள்ள அவனை ஸேவித்தவர்கள் இருக்கின்றனர்.