| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 328 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 1 | கதிராயிர மிரவி கலந் தெரித்தா லொத்த நீள் முடியன் எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் அதிரும் கழற் பொரு தோள் இரணிய னாகம் பிளந்து அரியாய் உதிரமளைந் தகையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர்–4-1-1 | கதிர்,Kathir - (எண்ணிறந்த) கிரணங்களை யுடைய ஆயிரம் இரவி,Aayiram Iravi - ஆயிரம் ஆதித்யர்கள் தறித்தால் ஒத்தத,Thariththaal Oththadha - ஜ்வலித்தாற்போல் (மிகவும் பளபளவா நின்றுள்ள) நீள் முடியன்,Neel Mudiyan - நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான இராமன்,Raaman - இராமபிரான் இருக்கும் இடம்,Irukkum Idam - எழுந்தருளியிருக்குமிடத்தை நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;) அதிரும்,Athirum - (கல கல் என்று) ஒலி செய்யா நின்றுள்ள கழல்,Kazhal - வீரக் கழலையும் பொரு தோள்,Poru Thol - போர் செய்யப் பதைக்கிற தோள்களையுமுடைய இரணியன்,Iraniyan - ஹிரண்யாஸுரனுடைய ஆகம்,Aagam - மார்பை அரி ஆய்,Ari Aay - நரஸிம்ஹ ருபியாய்க் கொண்டு பிளந்து,Pilandhu - கீண்டு உதிரம் அளைந்து,Uthiram Alainthu - (அதனாலுண்டான) ரத்தத்தை அளைந்த கையோடு,Kaiyodu - கைகளோடு கூடி இருந்தானை,Irundhaanai - (சீற்றந்தோற்ற) எழுந்தருளியிருந்த நிலைமையில் (அவனை) உள்ள ஆ உண்டார் உளர்,Ulla Aa Undaar Ular - உள்ள அவனை ஸேவித்தவர்கள் இருக்கின்றனர். |