Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 329 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
329ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 2
நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச் சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க
வேந்தர் தலைவஞ் சனகராசன் தன் வேள்வியில் கண்டாருளர்–4-1-2
நாந்தகம்,Naandhagam - நந்தகம் என்னும் வாளையும்
சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்ச ஐன்யத்தையும்
தண்டு,Thandu - கௌமோதகி என்னும் கதையையும்
நாண் ஒலி,Naan Oli - நாண் கோஷத்தை யுடைய
சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்க ததுஸ்னையும்
திரு சக்கரம்,Thiru Chakkaram - திருவாழி யாழ்வானையும்
ஏந்து பெருமை இராமன்,Aendhu Perumai Raman - (திருக்கைகளில்) ஏந்தும்படியான பெருமையை யுடைய இராமபிரான்
இருக்கும் இடம் நாடுதிரேல்,Irukkum Idam Naadhuthireel - எழுந்தருளியிருக்குமிடத்தை தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;)
காந்தன் முகிழ் விரல் சீதைக்கு ஆகி,Gaanthan Mughil Viral Seethaaikku Aagi - செங்காந்தளம்பு போன்ற விரல்களையுடைய பிராட்டிக்காக
வேந்தர் தலைவன்,Vaendhar Thalaivan - ராஜாதிராஜனான
சனகராசன் தன்,Sanagaraasan Than - ஜனக சக்கரவர்த்தியினுடைய
வேள்வியில்,Velviyil - யஜ்ஞ வாடத்திலே
சென்று,Sendru - எழுந்தருளி
கடு சிலை,Kadu Silai - வலிய வில்லை
இறுக்க கண்டார் உளர்,Irukka Kandaar Ular - முறிக்கக் கண்டவர்கள் இருக்கின்றனர்.