| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 329 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 2 | நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச் சார்ங்கம் திருச் சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க வேந்தர் தலைவஞ் சனகராசன் தன் வேள்வியில் கண்டாருளர்–4-1-2 | நாந்தகம்,Naandhagam - நந்தகம் என்னும் வாளையும் சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்ச ஐன்யத்தையும் தண்டு,Thandu - கௌமோதகி என்னும் கதையையும் நாண் ஒலி,Naan Oli - நாண் கோஷத்தை யுடைய சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்க ததுஸ்னையும் திரு சக்கரம்,Thiru Chakkaram - திருவாழி யாழ்வானையும் ஏந்து பெருமை இராமன்,Aendhu Perumai Raman - (திருக்கைகளில்) ஏந்தும்படியான பெருமையை யுடைய இராமபிரான் இருக்கும் இடம் நாடுதிரேல்,Irukkum Idam Naadhuthireel - எழுந்தருளியிருக்குமிடத்தை தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;) காந்தன் முகிழ் விரல் சீதைக்கு ஆகி,Gaanthan Mughil Viral Seethaaikku Aagi - செங்காந்தளம்பு போன்ற விரல்களையுடைய பிராட்டிக்காக வேந்தர் தலைவன்,Vaendhar Thalaivan - ராஜாதிராஜனான சனகராசன் தன்,Sanagaraasan Than - ஜனக சக்கரவர்த்தியினுடைய வேள்வியில்,Velviyil - யஜ்ஞ வாடத்திலே சென்று,Sendru - எழுந்தருளி கடு சிலை,Kadu Silai - வலிய வில்லை இறுக்க கண்டார் உளர்,Irukka Kandaar Ular - முறிக்கக் கண்டவர்கள் இருக்கின்றனர். |