| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 330 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 3 | கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொரு தழிய சிலையால் மராமர மெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தட வரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்–4-1-3 | கொலை யானை,Kolai Yaanai - கொலை செய்வதையே இயல்பாக வுடைய (குவலய பீடமென்னும் யானையினுடைய கொம்பு,Kombu - தந்தங்களை பறித்து,Pariththu - பறித்துக் கொண்டவனும், கூடலர்,Koodalar - (ஜகஸ்தாதத்திலுள்ள ராக்ஷஸர்களாகிய) சத்துருக்களுடைய சேனை,Saenai - சேனையானது அழிய,Azhiya - அழியும்படி பொருது,Porudhu - போர் செய்தவனும், சிலையால்,Silaiyaal - வில்லாலே மராமரம்,Maraamaram - ஸப்த ஸால வ்ருக்ஷங்களை மெய்த,Meidha - எய்தவனுமான தேவனை,Thevanai - எம்பிரானை சிக்கன நாடுதிரேல்,Sikkana Naadhuthireel - த்ருடாத்யவஸாயத்தோடு தேடுகிறீர்களாகில், குரங்கு இனம்,Kurangu Inam - (அவனிருக்குமிடஞ் சொல்லுகிறேன்;) வாநர ஸேனையானது தடவரை,Thadavarai - பெரிய மலைகளை தலையால்,Thalaiyaal - (தமது) தலைகளினால் தாங்கிக் கொண்டு சென்று,Thaangik Kondu Sendru - சுமந்து கொண்டு போய் அடைப்ப,Adaippa - கடலின் நடுவே அணையாக) அடைக்க அலை ஆர் கடல் கரை,Alai Aar Kadal Karai - அலையெறிகிற கடற்கரையிலே வீற்றிருந்தானை,Veetrirundhaanai - எழுந்தருளியிருந்த இராமபிரானை அங்குத்தை கண்டார் உளர்,Anguththai - அந்த ஸந்நிவேசத்தில் கண்டார் உளர் |