| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3303 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (நிகமத்தில் இப்பத்தும் வல்லார் இட்ட வழக்காய் இருக்கும் திருநாடு என்கிறார்) 11 | வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக் கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11 | வைத்த மா நிதி ஆம்,Vaitha maa nidhi aam - சேமித்து வைத்த மஹா நிதிபோன்ற மது சூதனையே அலற்றி,Madhu soodanaie alatri - எம்பெருமானையே வாய்வெருவி கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன,Kothu alar pozhil soozh kurugur sadagopan sonna - பூங்கொத்து அலருகிற சோலைகளால் சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்குத் அருளிச்செய்த பத்து நூற்றுள்,Pathu nootrul - ஆயிரத்தினுள்ளே இப் பத்து,ep pathu - இத்திருவாய்மொழியை அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து,Avan ser thirukolurkkay siththam vaiththu - அவன் வர்த்திக்கிற திருக்கோளூரிலேயே மனம் பதிந்து உரைப்பார்,Uraippar - உரைக்க வல்லவர்கள் திகழ்,Thigazh - நித்யமாக விளங்குகின்ற பொன் உலகு ஆள்வார்,Pon ulagu aalvaar - பரமபதத்தை ஆளப் பெறுவர்கள். |