Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 331 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
331ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 4
தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவியதனை நாடுதிறில் வம்மின் சுவடுரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டாருளர்–4-1-4
பரந்த,Parandha - எங்கும் பரவின
தோயம் நடுவு,Thoyam Naduvu - ஜலத்தின் நடுவே
சூழலின்,Soozhalin - உபாயத்தினால்
தொல்லை வடிவு கொண்ட,Thollai Vadivu Konda - பழமையான (பெரிய) வடிவைச் சுருக்கிக் கொண்ட
மாயம் குழலி அதனை,Maayam Kuzhali Adhanai - அந்த ஆச்சர்யக் குட்டியை
நாடுதிறில்,Naadhuthiril - தேட முயன்றீர்களாகில்
வம்மின்,Vammin - (இங்கே) வாருங்கள்;
சுவடு உரைக்கேன்,Suvadu Uraikkaen - (உங்களுக்கு) ஓரடையாளம் சொல்லுகின்றேன்;
ஆயர் மகள்,Aayar Magal - (ஸ்ரீகும்பர் என்னும்) ஆயருடைய பெண் பிள்ளையும்
மடம்,Madam - மடப்பம் என்ற குணத்தை உடையவளுமான
பின்னைக்கு ஆகி,Pinnaikku Aagi - நப்பின்னைப் பிராட்டிக்காக
அடல் விடை யேழினையும்,Adal Vidai Eaezhinaiyum - வலிய ரிஷபங்களேழும்
வீய,Veea - முடியும்படியாக
பொருது,Porudhu - (அவற்றோடு) போர் செய்து (அந்த ஆயாஸத்தாலே)
வியர்த்து நின்றானை,Viyarththu Nindraanai - குறு வெயர்ப்பரும்பின வடிவுந்தானுமாய் நின்றவனை
மெய்யம்மையே,Meiyyammayae - உண்மையாகவே கண்டார் உளர்