திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 332 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
332பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 5
நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேரேற்றி சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்–4-1-5
பதவுரை Show / Hide
நீர்,Neer - (எம்பெருமானது ஸ்ரீபாத) தீர்த்தமானது
ஏறு,Eru - ஏறப் பெற்ற
செம் சடை,Sem Sadai - சிவந்த ஜடையையுடைய
நீல கண்டனும்,Neela Kandhanum - (விஷமுடையதனால்) கறுத்த மிடற்றை யுடையவனான சிவ பெருமானும்.
நான்முகனும்,Naanmughanum - சதுர் முக ப்ரஹ்மாவும்
முறையால்,Muraiyaal - (சேஷ சேஷி பாவமாகிற) முறையின்படி
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற,Seer Eru Vaasagam Seiyya Nindra - சிறந்த சொற்களைக் கொண்டு துதிக்கும்படி அமைந்து நின்ற
திருமாலை,Thirumaalai - ச்ரிய : பதியாகிய எம்பெருமானை
நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில், (இதைக் கேளுங்கள்;)
வார் ஏறு,Vaar Eru - கச்சை அணிந்த
கொங்கை,Kongai - முலைகளை யுடைய
உருப்பிணியை,Urupiniyai - ருக்மிணிப் பிராட்டியை
வலிய,Valiya - பலாத்காரமாக பிடித்துக்கொண்டு
தேர் ஏற்றி,Ther Eritti - (தனது) திருத் தேரின் மேல் ஏற விட்டு
சேனை நடுவு,Saenai Naduvu - (அவ்வளவிலே சிசுபாலதிகளான பல அரசர்கள் எதிர்த்துவர) அவ்வரசர்களுடைய ஸேநா மத்யத்திலே
போர் செய்ய,Por Seiyya - (அவ்வரசர்களோடு )யுத்தம் செய்ய
சிக்கென கண்டார் உளர்,Sikkena Kandaar Ular - திண்மையான (த்ருடமாக) கண்டார் உளர்