| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 333 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 6 | பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லானை மா மணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல் பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறி துவரை எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்–4-1-6 | பொல்லா வடிவு உடைபேய்ச்சி,Polla Vadivu Udaipeychchi - மஹா கோரமான வடிவை யுடைய பூதனை யானவள் அஞ்ச,Anja - மாளும்படியாக புணர்முலை,Punarmulai - தன்னில் தான் சேர்ந்திருள்ள (அவளது) முலையிலே வாய் மடுக்க வல்லான்,Vaai Madukka Vallaan - (தனது) வாயை வைத்து உண்ண வல்லவனும் மா மணிவண்ணன்,Maa Manivannan - நீலமணி போன்ற நிறத்தை யுடையவனுமான எம்பெருமான் மருவும் இடம்,Maruvum Idam - பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடத்தை நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில் பௌவம் ஏறி துவரை,Pauvam Eri Thuvarai - (இதைக் கேளுங்கள்:) கடலலைகள் வீசப் பெற்றுள்ள ஸ்ரீத்வாரகையிலே எல்லாரும் சூழ,Ellaarum Soozha - தேவிமார் எல்லாரும் சுற்றுஞ் சூழ்ந்து கொண்டிருக்க பல் ஆயிரம் பெரு தேவிமாரொடு,Pal Aayiram Peru Devimaarodu - (அந்தப்) பதினாறாயிரம் தேவிமாரோடு கூட சிங்காசனத்து,Singaasanaththu - ஸிம்ஹாஸநத்தில் இருந்தானை கண்டார் உளர்,Irundhaanai Kandaar Ular - எழுந்தருளி யிருக்கும் போது கண்டார் உளர் |