திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 334 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 7 | வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன்
உள்ள விடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டாருளர்–4-1-7 | பதவுரை Show / Hideவெள்ளை,Vellai - வெண்மை நிறமுடையதும் விளி,Vili - (அநுபவ கைங்கரியங்களில் ருசியுடையீர்! வாருங்கள் என்று, தன் த்வநியால்) அழைப்பது போன்றுள்ளதுமான சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும் வெம் சுடர்,Vem Sudar - தீக்ஷ்ணமான ஜ்யோதிஸ்ஸை யுடைய திருச் சக்கரம்,Thiruch Chakkaram - திருவாழி யாழ்வாளையும் ஏந்து கையன்,Aendhu Kaiyan - தரியா நின்றுள்ள திருக்கைகளையுடைய எம்பெருமான் உள்ள இடம்,Ulla Idam - எழுத்தருளி யிருக்குமிடத்தை வினவில்,Vinavil - கேட்கிறீர்களாகில் உமக்கு,Umakku - (கேட்கிற) உங்களுக்கு இறை சுவடு உரைக்கேன்,Irai Suvadu Uraikkaen - சிறிது அடையாளம் சொல்லுகிறேன், வம்மின்,Vammin - வாருங்கள்; வெள்ளைப் புரவி,Vellaip Puravi - வெள்ளைக் குதிரகைள் பூண்டிருப்பதும் குரங்குகொடி,Kurangukodi - குரங்காகிற வெற்றிக் கொடியை உடையதுமான தேர்மிசை,Thermisai - (அர்ஜுனனுடைய) தேரின் மேலே முன்பு நின்று ,Munbu Nindru - (ஸாரதியாய்) முன்னே நின்று படை,Padai - ஸைந்யத்துக்கு கள்ளம் துணை ஆகி,Kallam Thunai Aagi - க்ருத்ரிமத் துணையாயிருந்து பாரதம்,Bhaaratham - பாரத யுத்தத்தை கை செய்ய கண்டார் உளர்,Kai Seiyya Kandaar Ular - அணி வகுத்து நடத்தும் போது கண்டார் உளர் |