Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3359 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3359திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (பராங்குசநாயகியானவள் தனது உள்ளத்தினுள்ளே ஒரு பெரியதிருவடித் திருநாள் நடந்து செல்லுகிறபடியை பேசி, தென்திருப்பபேரையிலே போகவேணுமென்று தனக்குப் பிறந்த துணிவைத் தாய்மாரிடம் கூறுகின்றாள்.) 1
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே. -7-3-1
அன்னை மீர்காள்!,Annai meerkal! - தாய்மார்களே
வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி,Vellai suri sangodu azhi endhi - வெண்ணிறத்தையும் சுரியையு முடைய ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் ஸூதர்சநத்தையும் ஸூதர்நசத்தையும் ஏந்திக்கொண்டு
தாமரைக் கண்ணன்,Thaamarai kannaan - செந்தாமரைக் கண்ணனான பெருமான்
என் நெஞ்சின் ஊடே,En nenjin oode - எனது நெஞ்சினுள்ளே
புள்ளே கடாகின்ற ஆற்றை,Pulle kadaagindra aatrai - நடத்துகிறபடியை
காணீர்,Kaaneer - நீங்கள் அறிகினறீர்களில்லையே!
என்சொல்லி சொல்லு கேன்,En solli sollu kaen - இவ்வநுபவத்துக்கு என்ன பாசுரமிட்டு நான் சொல்லுவேன்;(இனி நான் செய்ய நினைத்ததாவது)
வெள்ளம் சுகம் அவன் வீற்றிருத்த,Vellam sugam avan veettrithu - ஆனந்த வெள்ளமே வடிவெடுத்தவானான பெருமான் வீற்றிருக்கு மிடமாயும்
வேதம் ஒலியும் விழா ஒலியும் பிள்ளை குழாம் விளையாட்டு ஒலியும் அறா,Vedam oliyum vizha oliyum pillai kulaam vilaiyaattu oliyum araa - வேதகோஷமும் உத்ஸவகோஷமும் சிறுபிள்ளைகளின் விஹார கோலாஹலமும் இடையறாமலிருக்கப் பெற்ற தாயுமுள்ள
திருப்பேரெயில்,Thirupereayil - திருப்பேரெயில் என்னுந் திருப்பதியிலே
நான் சேர்வன்,Naan servan - நான் சென்று சேரக்கடவேன்.