| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 336 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 9 | மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவுமெல்லாம் திண்ணம் விழுங்கி யுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் எண்ணற் கரிய தோரேனமாகி இரு நிலம் புக்கிடந்து வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்–4-1-9 | மண்ணும்,Mannum - பூமியையும் மலையும்,Malaiyum - மலைகளையும் மறி,Mari - அலை யெறியா நின்றுள்ள கடல்களும்,Kadalgallum - கடல்களையும் மற்றும் யாவும் எல்லாம்,Matrum Yaavum Ellaam - மற்றுமுண்டான எல்லாப் பொருள்களையும் திண்ணம்,Thinnam - நிச்சயமாக விழுங்கி,Vizhungi - (ப்ரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கி உமிழ்ந்த,Umizhndha - (பின்பு ப்ரளயங்கழிந்தவாறே அவற்றை வெளி…..காண) உமிழ்ந்து தேவனை,Thevanai - எம்பெருமானை சிக்கென,Sikkena - ஊற்றத்துடனே நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில், (இதனைக் கேளுங்கள்.) எண்ணற்கு அரியது,Ennarku Ariyadhu - நினைக்க முடியாத (பெருமையையுடைய) ஓர்,Or - ஒப்பற்ற ரேனமாகி ,Raenamaagi - அவதரித்து புக்கு,Pukku - ப்ரளய வெள்ளத்தில் புகுந்தது இரு நிலம்,Eru Nilam - பெரிய பூமியை இடந்து,Edandhu - அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து (அவ்வளவிலே பூமிப்பிராட்டி தன்னை வந்து அணைக்க,) வண்ணம்,Vannam - அழகியதும் கரு,Karu - கறுத்ததுமான குழல்,Kuzhal - குந்தலையுடைய மாதரோடு ,Maadharodum - (அந்த) பூமிப்பிராட்டியோடு மணந்தானை கண்டார் உளர்,Manandhaanai Kandaar Ular - ஸமச்லேஷித்தருளினவனை கண்டார் உளர் |