Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 337 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
337ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 10
கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடுரைத்து
புரவி முகம் செய்து செந்நெலோங்கி விளை கழனிப் புதுவை
திருவிற் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே–4-1-10
கரியமுகிற் புரை மேனி,Kariyamugir Purai Maeni - கரு மலர் போன்ற திருமேனியுடையனும்
மாயனை,Maayanai - ஆச்சரிய செய்கைகளை யுடையனுமான கண்ணபிரானை
கண்ட சுவடு,Kanda Suvadu - ஸேவித்த அடையாளங்களை
உரைத்த,Uraitha - அருளிச் செய்த;
செந்நெல்,Sennel - செந்நெற் பயிர்களானவை
ஓங்கி,Ongi - (ஆகாசமளவும்) உயர்ந்து
புரவி முகம் செய்து,Puravi Mugam Seidhu - குதிரை முகம் போலத் தலை வணங்கி
விளை,Vilai - விளையா நிற்கப் பெற்ற
கழனி,Kazhani - வயல்களை யுடைய
புதுவை,Puduvai - ஸ்ரீவில்லிபுத்தார்க்குத் தலைவரும்
திருவின்,Thiruvin - (விஷ்ணு பக்தியாகிற) செல்வத்தினால்
பொலி,Poli - விளங்கா நின்றுள்ளவரும்
மறை வாணன்,Marai Vaanan - வேதத்துக்கு நிர்வாஹகருமான
பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியாழ்வார்
சொன்ன,Sonna - அருளிச்செய்த
மாலை பத்தும்,Maalai Paththum - சொல் மாலையாகிற இப் பத்துப் பாட்டையும்
பரவும் மனம் உடை,Paravum Manam Udai - அநுஸத்திக்கைக் கீடான மநஸ்ஸை யுடையவரும்
பக்தர் உள்ளார்,Bakthar Ullaar - பக்தியை யுடையவருமாயிருப்பவர்கள்
பரமன்,Paraman - பரம புருஷனுடைய
அடி,Adi - திருவடிகளை
சேர்வர்கள்,Saervargal - கிட்டப் பெறுவார்கள்