திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3378 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3378திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 9
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9
பதவுரை Show / Hide
appan,அப்பன் - ஸ்வாமியான ஸாவேச்வரன் முந்துற் முன்னம்
anru,அன்று - அந்தவொரு க்ஷ்ணத்திலேயாம்;
man neer eri kaal vin,மண் நீர் எரி கால் விண் - பஞ்ச பூதங்ககளையும்
malai mudhal,மலை முதல் - மலைகள் முதலானவற்றையும்
seydhadhum,செய்ததும் - படைத்ததும்
anru,அன்று - அந்த க்ஷ்ணத்திலேயாம்;
sudar irandu,சுடர் இரண்டு - சந்திரன் ஸுர்யன் ஆகிய இரண்டு சுடர்ப்பொருள்களையும்
piravum,பிறவும் - மற்றுமுள்ள நக்ஷ்த்ராதிதேஜஸ் பதார்த்தங்களையும்
ulagam seydhadhum,உலகம் செய்ததும் - உலகங்களைப்படைத்ததும்,
seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும்
anru,அன்று - அந்த க்ஷணத்திலேயாம்
pinnum,பின்னும் - அதுக்குமேலே
mazhai,மழை - மேகங்களையும்
uyir,உயிர் - மழையினால்பிழைக்கும் உயிர்களையும்
thevum,தேவும் - மழைக்குக் கடவர்களான தேவர்களையும்
matrum,மற்றும் - மற்றுமுள்ள திர்யக் ஸ்தாவரங்களையும்
seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும்