| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3378 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 9 | அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9 | appan,அப்பன் - ஸ்வாமியான ஸாவேச்வரன் முந்துற் முன்னம் anru,அன்று - அந்தவொரு க்ஷ்ணத்திலேயாம்; man neer eri kaal vin,மண் நீர் எரி கால் விண் - பஞ்ச பூதங்ககளையும் malai mudhal,மலை முதல் - மலைகள் முதலானவற்றையும் seydhadhum,செய்ததும் - படைத்ததும் anru,அன்று - அந்த க்ஷ்ணத்திலேயாம்; sudar irandu,சுடர் இரண்டு - சந்திரன் ஸுர்யன் ஆகிய இரண்டு சுடர்ப்பொருள்களையும் piravum,பிறவும் - மற்றுமுள்ள நக்ஷ்த்ராதிதேஜஸ் பதார்த்தங்களையும் ulagam seydhadhum,உலகம் செய்ததும் - உலகங்களைப்படைத்ததும், seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும் anru,அன்று - அந்த க்ஷணத்திலேயாம் pinnum,பின்னும் - அதுக்குமேலே mazhai,மழை - மேகங்களையும் uyir,உயிர் - மழையினால்பிழைக்கும் உயிர்களையும் thevum,தேவும் - மழைக்குக் கடவர்களான தேவர்களையும் matrum,மற்றும் - மற்றுமுள்ள திர்யக் ஸ்தாவரங்களையும் seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும் |