| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 338 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 1 | அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்களாடும் சீர் சிலம்பாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே-4-2-1 | தெய்வம் மகளிர்கள்,Deivam Magalirgala - தேவ ஸ்திரீகள் சிலம்பு ஆர்க்க ,Silambu Aarka - (நமது) பாதச் சிலம்புகள் ஒலிக்கும் படி வந்து ,Vandhu - (பூலோகத்தில்) வந்து ஆடும் சீர்,Aadu Seer - நீராடும்படியான பெருமையை யுடைய சிலம்பு ஆறு,Silambu Aaru - நூபுர கங்கையானது பாயும்,Paayum - (இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள தென் திருமாலிருஞ் சோலை,Then Thirumaalirun Cholai - அழகிய திருமாலிருஞ் சோலையானது, அலம்பா,Alampaa - பிராணிகளை அலையச் செய்தும் வெருட்டா,Veruttaa - பயப்படுத்தியும் கொன்று,Konru - உயிர்க் கொலை செய்தும் திரியும்,Thiriyum - திரிந்து கொண்டிருந்த அரக்கரை,Arakkarai - ராக்ஷஸர்களை குலம் பாழ் படுத்து,Kulam Paazh Paduthu - ஸ குடும்பமாகப் பாழாக்கி குலம் விளக்கு ஆய் நின்றகோன்,Kulam Vilakku Aay Nintragon - (இக்ஷ்வாகு வம்சத்துக்கு விளக்காய் நின்ற பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமான) மலை,Malai - திருமலையாம். |