| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3383 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (நிச்சலும் சிந்திப்பது தவிர வேறொன்றுமறியாத சிசுபாலனையுமுட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட மஹாகுணத்தை யறிந்தவர்கள் அப்படிப் பட்ட குணவானுடைய திருக்குணங்களையன்றோ காதாரக் கேட்கவேணுமென்கிறார்.) 3 | கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ? கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3 | கேட்பார்,Ketpar - எம்பெருமானுடைய நிந்தைகளையேகா தாரக்கேட்கவேணுமென்கிற விருப்பமுடையவர்களுக்குங் கூட செவி சுடு,Sevi sudu - கர்ணகடோரமான கீழ்மை வசவுகளேவையும்,Keezmai vasavugalayevaiyum - மிகத் தண்ணிய தூஷணைகளையிட்டு தூஷிக்குமவனாய் சேண் பால் பழம் பகைவன் சிசுபாலன்,Sen paal pazham pakaivan sishupalan - நெடுங்காலத்துப் பகைவனான சிசுபாலனுங்கூட திரு அடி,Thiru adi - ஸ்லாமியான கண்ண பிரானுடைய தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்தும்,Thaal paal adaindha thanmai arivaarai arindhum - திருவடிகளிலே ஸாயுஜ்யம்பெற்றபடியை யறிவாரை அறிந்து வைத்தும், கேட்பார்கள்,Kedpaarhal - நல்லது கேட்க வேணுமென்றிருக்குமவர்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ,Keshavan keerthi allaal matrum kedparoh - எம்பெருமானுடைய கீர்த்திகளை யொழிய வேறொன்று கேட்பாரோ? |