| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3385 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (அழிந்த ஜகத்தை யுண்டாக்கினவளவே யல்லாமல், அந்தஜகத்தை ப்ரளயங்கொள்ள மஹாவராஹமா யெடுத்து ரக்ஷித்த மஹாகுணத்தை யநுஸந்தித்தால் அவன்திருவடிகளே தஞ்ச மென்றிருக்க வேண்டாவோவென்கிறார்.) 5 | சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ? ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத் தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5 | பெரு புனல் தன்னுள் ஆழ அழுந்திய ஞாலத்தை,Peru punal thannul aazhal azhundhiya nyaalaththai - எல்லையற்ற பிரளய ஜலத்திலே மிக ஆழமாக அழுந்திக்கிடந்த பூமியை தாழப்படாமல்,Thaalappadamaal - அநர்த்தப்படாதபடிக்கு தன் பால் ஒரு கோடு இடை தான் கொண்ட,Than paal oru koodu idai thaan konda - தன் திருமேனியில் ஏக தேசமாயிருப்பதொரு கோட்டினிடத்திலே தானாகவே இடந்தெடுத்துக் கொண்ட கேழல் திரு உரு ஆயிற்று,Kezhla thiru uru aayitru - ஸ்ரீ வராஹரூப மெடுத்த படியை கேட்டும் உணர்ந்தும்,Kettum unarnthum - இதிஹாஸ புராணமுகங்களாலே கேட்டும் மனனம் பண்ணியும் வைத்து சூழல்கள் சிந்திக்கில்,Soozhhalgal sindhikkil - தம்தமமுடைய அபி மதங்கள் ஸித்திப்பதற்கு விரகு பார்க்குமளவில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ,Maayan kazhal anri soozhvaro - ஆச்சரிய சேஷ்டிதனான அப்பெருமானுடைய திருவடிகளையொழிய வேறொன்றை ஆச்ரயிப்பரோ? |