| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3386 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (தன் மேன்மை பாராமல் தான் இரப்பாளனாய் வாமநப்ரஹ்மசாரியாய் மஹாபலியின் செருக்கை யடக்கித் தேவர்களைக் காத்தருளின மஹாகுணத்தையறிந்து வைத்து மற்றொருவர்க்கு ஆளாகவொண்ணுமோ வென்கிறார்.) 6 | கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ? வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6 | வாட்டம் இலா வண்கை மாவலிவாதிக்க,Vaatam ilaa vankai maavalivaadhikka - ஒருகாலும் குறையாத ஔதார்யத்தையுடைய மஹாபலியானவன் (தன் செருக்காலே) நலிய வாதிப்புஉண்டு,Vaadippundhu - ஹிம்ஸைபட்டு ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு,Eettam kol theevargal sendru irandhaarkku - திரண்டு சென்று ப்ரார்த்தித்த தேவர்களுடைய இடர் நீக்கிய,Idar neekkiya - இடரை நீக்குவதற்காக கோடு அம் கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டும்,Koodu am kai vaamanan aay seitha kooththukkal kandum - ஏற்றகையையுடைய ஸ்ரீவாமன மூர்த்தியாய்ச் செய்தருளின மநோஹர சேஷ்டிதங்களை யநுஸந்தித்து வைத்தும் கேட்டும் உணர்ந்தவர்,Kettum unarnthavar - புராண முகத்தாலே கேட்டும் அறிவுடையராயிருந்தவர்கள் கேசவற்கு அன்றி ஆள் ஆவரோ,Keshavarku anri aal aavaro - அந்தப்பெருமானுக்கல்லது மற்றொருவதற்கு அடிமையாவரோ? |