Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3386 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3386திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (தன் மேன்மை பாராமல் தான் இரப்பாளனாய் வாமநப்ரஹ்மசாரியாய் மஹாபலியின் செருக்கை யடக்கித் தேவர்களைக் காத்தருளின மஹாகுணத்தையறிந்து வைத்து மற்றொருவர்க்கு ஆளாகவொண்ணுமோ வென்கிறார்.) 6
கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6
வாட்டம் இலா வண்கை மாவலிவாதிக்க,Vaatam ilaa vankai maavalivaadhikka - ஒருகாலும் குறையாத ஔதார்யத்தையுடைய மஹாபலியானவன் (தன் செருக்காலே) நலிய
வாதிப்புஉண்டு,Vaadippundhu - ஹிம்ஸைபட்டு
ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு,Eettam kol theevargal sendru irandhaarkku - திரண்டு சென்று ப்ரார்த்தித்த தேவர்களுடைய
இடர் நீக்கிய,Idar neekkiya - இடரை நீக்குவதற்காக
கோடு அம் கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டும்,Koodu am kai vaamanan aay seitha kooththukkal kandum - ஏற்றகையையுடைய ஸ்ரீவாமன மூர்த்தியாய்ச் செய்தருளின மநோஹர சேஷ்டிதங்களை யநுஸந்தித்து வைத்தும்
கேட்டும் உணர்ந்தவர்,Kettum unarnthavar - புராண முகத்தாலே கேட்டும் அறிவுடையராயிருந்தவர்கள்
கேசவற்கு அன்றி ஆள் ஆவரோ,Keshavarku anri aal aavaro - அந்தப்பெருமானுக்கல்லது மற்றொருவதற்கு அடிமையாவரோ?