| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3388 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி ஆச்ரிதரக்ஷ்ணம் பண்ணின மஹாகுணத்தைப் பேசுகிறாரிதில்.) 8 | செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ? எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8 | எல்லை இலாத பெரு தவத்தால்,Ellai ilaadha peru thavaththaal - அபரிமதமான மஹாத பஸ்ஸீக்களாலே பல செய் மிறை,Pala sei mirai - பலவகையாகச் செய்யப்ப பட்டலோகபீடையை யுடையனாய் அமரரை அல்லல் செய்யும்,Amarai allaal seyyum - (விசேக்ஷித்து) தேவர்களுக்குத் துன்பங்களை யுண்டுபண்ணினவனான இரணியன் ஆகத்தை,Iraniyan aakaththai - ஹிரண்யாஸீரனுடைய உடலை, மல்லல் அரி உரு ஆய் செய்த,Mallal ari uru aay seitha - பெரிய நரசிங்க வடிவையுடைனாய்க் கொண்டு இருபிளவாகச் செய்த மாயம் அறிந்தும்,Maayam arindhum - ஆச்சரியத்தை யறிந்து வைத்தும் செல்ல உணர்ந்துவர்,Sella unarnththuvaar - பூர்த்தியான ஞானத்தைப் பெற்றவர்கள் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ,Selvam than seer anri karparoa - லக்ஷ்மீபதியான அப்பெருமானுடைய திருக்குணங்களையன்றி வேறென்றைக் கற்பரோ? |