Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3388 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3388திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி ஆச்ரிதரக்ஷ்ணம் பண்ணின மஹாகுணத்தைப் பேசுகிறாரிதில்.) 8
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8
எல்லை இலாத பெரு தவத்தால்,Ellai ilaadha peru thavaththaal - அபரிமதமான மஹாத பஸ்ஸீக்களாலே
பல செய் மிறை,Pala sei mirai - பலவகையாகச் செய்யப்ப பட்டலோகபீடையை யுடையனாய்
அமரரை அல்லல் செய்யும்,Amarai allaal seyyum - (விசேக்ஷித்து) தேவர்களுக்குத் துன்பங்களை யுண்டுபண்ணினவனான
இரணியன் ஆகத்தை,Iraniyan aakaththai - ஹிரண்யாஸீரனுடைய உடலை,
மல்லல் அரி உரு ஆய் செய்த,Mallal ari uru aay seitha - பெரிய நரசிங்க வடிவையுடைனாய்க் கொண்டு இருபிளவாகச் செய்த
மாயம் அறிந்தும்,Maayam arindhum - ஆச்சரியத்தை யறிந்து வைத்தும்
செல்ல உணர்ந்துவர்,Sella unarnththuvaar - பூர்த்தியான ஞானத்தைப் பெற்றவர்கள்
செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ,Selvam than seer anri karparoa - லக்ஷ்மீபதியான அப்பெருமானுடைய திருக்குணங்களையன்றி வேறென்றைக் கற்பரோ?