| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3389 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (பஞ்சபாண்டவர்களுக்குக் கையாளாயிருந்து இழிதொழில் செய்து பார்த்தஸாரதி யென்று பேர்பெற்றுத்தாழநின்று அநிஷ்டவர்க்கங்களை அகற்றின மஹாகுணத்தைப் பேசுகிறார்.) 9 | மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ? தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே –7-5-9 | தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க,Thaayam serum oru noorruvar mang - தாயாதி முறையில் சண்டை செய்து கிளர்ந்ததுர்யோதநாதிகள் தொலைய ஓர் ஐவர்க்கு ஆய்,Oru aivarukku aay - விலக்ஷ்ணர்களான பஞ்சபாண்டவர்களுக்காகி தேசம் அறிய,Desam ariya - ஸகலலோக ப்ரஸித்த மாம்படி ஓர் சாரதி ஆய் சென்று,Oru sarathi aay sendru - ஒப்பற்ற ஸாரதியாகப் போய் சேனையை நாசம் செய்திட்டு,Senaiyai naasam seiththittu - எல்லாம் சேனைகளையும் அழியச்செய்து நடந்தநல்வார்த்தை அறிந்தும்,Nadandhanalvaarthai arindhum - தன்னடிச் சோதிக் கெழுந்தருளினானென்கிற நல்வார்த்தையை யறிந்தும் மாயம் அறிபவர்,Maayam aripavar - மிகவும் ஆச்சரியமான பகவத் கதைகளை யறியுமவர்கள் மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ,Maayavarku anri aal aavaro - அப்பெருமானுக்கல்லது மற்றொருவர்க்கு அடிமையாவரோ? |