| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 339 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 2 | வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை எல்லா விடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டொலி செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே–4-2-2 | பல்லாண்டு ஒலி,Pallandu Oli - மங்களசான கோஷமானது எல்லா இடத்திலும்,Ella Idathilum - எல்லா யிடங்களிலும் எங்கும்,Engum - திருமலையின் பரப்பெங்கும் பரந்து செல்லா நிற்கும் சீர்,Parandhu Sella Nirkum Seer - பரவிச் செல்லும் படியான பெருமையை யுடைய தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை வல் ஆளன்,Val Aalan - வலிய ஆண்மையை யுடையவனும் வாள்,Vaal - (சிவனிடத்துப் பெற்ற) வாளை யுடையவனுமான அரக்கன்,Arakkan - ராவணனுடைய தோளும் முடியும்,Tholum Mudiyum - தோள்களும், தலைகளும் தங்கை,Thangai - (அவனது) தங்கையாகிய சூர்ப்பணகையினது பொல்லாத மூக்கும்,Pollaadha Mookkum - கொடிய மூக்கும் போக்குவித்தான்,Pookkuvithaan - அறுப்புண்டு போம்படி பண்ணின எம்பெருமான் பொருந்தும்,Porundhum - பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடமான மலை,Malai - திருமலையாம். |