திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 34 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
34பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 12
மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே–1-2-12
பதவுரை Show / Hide
மை,Mai - மையணிந்த
தட,Thada - பெரிய
கண்ணி,Kanni - கண்களையுடைய
அசோதை,Asodhai - யசோதைப்பிராட்டியாலே
வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப்படுகின்றவனாய்
தலைசெய்,Thalaisei - உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த)
நீலம் நிறம்,Neelam niram - கருநெய்தல் பூவினது போன்ற நிறத்தையுடையவான
சிறுபிள்ளை,Sirupillai - (இந்த) பாலக்ருஷ்ணனுடைய
நெய்,Ney - கூர்மைபொருந்திய
தலை,Thalai - நுதியையுடைய
நேமியும்,Nemiyum - திருவாழியும்
சங்கும்,Sangum - திருச்சங்கும்
நிலாவிய,Nilaviya - அமைந்திராநின்றுள்ள
கைத்தலங்கள் வந்து காணீரே,Kaithalangal vandhu kaanire - உள்ளங்கைகளை வந்து காணீர்!
கனம்,Kanam - பொன்னால்செய்த
குழையீர் வந்து காணீரே,Kuzhaiyeer vandhu kaanire - காதணிகளையுடைய பெண்காள்! வந்து காணீர்!!