திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 340 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
340பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 3
தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை அக் கானெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே-4-2-3
பதவுரை Show / Hide
எக் காலமும்,Ek Kaalamum - எப்போதும்
சென்று,Senru - போய்
சேவித்திருக்கும்,Sevithirukkum - திருவடி தொழா நின்றுள்ள
அடியரை,Adiyarai - பாகவதர்களை
அக் கான் நெறியை மாற்றும்,Ak Kaan Neriya Maatrum - அப்படிப்பட்ட (கொடுமையான) (பாவக்)காட்டு வழியில் நின்றும் விலக்கக் கடவதும்
தண்,Than - தாப ஹரமுமான
மாலிருஞ்சோலை,Maaliruncholai - மாலிருஞ்சோலை
தக்கார் மிகார்களை,Thakkar Migargalai - (க்ருபா விஷயத்தில்) எம்பெருமான் ஒத்தவர்களும் (அவனிலும்) மேற்பட்டவர்களுமாயுள்ள மஹாத்மாக்களை
சஞ்சலம் செய்யும்,Sanchalam Seyyum - அலைத்து வருந்தா நின்றுள்ள
சலவரை,Salavarai - க்ருத்ரிமப் பயல்களை
தெக்கு ஆம் நெறியே,Thekku Aam Neriye - தென் திசையிலுள்ள நரக மார்க்கத்திலே
போக்கு விக்கும்,Pookku Vikkum - போகும் படி பண்ணா நின்ற
செல்வன்,Selvan - ச்ரிய பதியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்குமிடமான)
பொன் மலை,Pon Malai - அழகிய திருமலையாம்