| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 340 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 3 | தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை அக் கானெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே-4-2-3 | எக் காலமும்,Ek Kaalamum - எப்போதும் சென்று,Senru - போய் சேவித்திருக்கும்,Sevithirukkum - திருவடி தொழா நின்றுள்ள அடியரை,Adiyarai - பாகவதர்களை அக் கான் நெறியை மாற்றும்,Ak Kaan Neriya Maatrum - அப்படிப்பட்ட (கொடுமையான) (பாவக்)காட்டு வழியில் நின்றும் விலக்கக் கடவதும் தண்,Than - தாப ஹரமுமான மாலிருஞ்சோலை,Maaliruncholai - மாலிருஞ்சோலை தக்கார் மிகார்களை,Thakkar Migargalai - (க்ருபா விஷயத்தில்) எம்பெருமான் ஒத்தவர்களும் (அவனிலும்) மேற்பட்டவர்களுமாயுள்ள மஹாத்மாக்களை சஞ்சலம் செய்யும்,Sanchalam Seyyum - அலைத்து வருந்தா நின்றுள்ள சலவரை,Salavarai - க்ருத்ரிமப் பயல்களை தெக்கு ஆம் நெறியே,Thekku Aam Neriye - தென் திசையிலுள்ள நரக மார்க்கத்திலே போக்கு விக்கும்,Pookku Vikkum - போகும் படி பண்ணா நின்ற செல்வன்,Selvan - ச்ரிய பதியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்குமிடமான) பொன் மலை,Pon Malai - அழகிய திருமலையாம் |