| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 341 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 4 | ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர் தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை வானாட்டில் நின்று மா மலர்க் கற்பகத் தொத்திழி தேனாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-4 | வான் நாட்டில்,Vaan Naatil - ஸ்வர்க்க லோகத்திலுள்ள மா மலர்,Maa Malar - பெரிய பூக்களை யுடைய கற்பகம்,Karpagam - கல்ப வ்ருக்ஷத்தினுடைய தொத்தில் நின்று,Thottil Ninru - பூங்கொத்தில் நின்றும் இழி,Izhi - பெருகா நின்ற தேன்,Then - தேனானது ஆறு பாயும்,Aaru Paayum - ஆறாய்க் கொண்டு ஓடா நிற்கிற தென்,Then - அழகை யுடைய திருமாலிருஞ்சோலை ஆன் ஆயர்,Aan Aayar - பசுக்களுக்குத் தலைவரான இடையர்கள் கூடி,Koodi - ஒன்று சேர்ந்து அமைத்து,Amaiththu - (இந்திரனுக்காக) ஏற்படுத்தின விழவை,Vizhavai - ஸமாராதனையை அமரர் தம் கோனார்க்கு ஒழிய,Amarar Tham Konarkku Ozhia - (அந்த) தேவேந்திரனுக்குச் சேர வொட்டாமல் தடுத்து கோவர்த்தனத்து,Govarthanathu - கோவர்த்தன மலைக்குச் (சேரும் படி) செய்தான் மலை,Seithaan Malai - செய்தருளின கண்ண பிரானுடைய திருமலையாம். |