| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 342 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 5 | ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிருண்டவன் சென்றுறையும் மலை கரு வாரணம் தன் பிடி துறந்தோட கடல் வண்ணன் திரு வாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே–4-2-5 | ஒரு வாரணம்,Oru Varanam - (ஸ்ரீகஜேந்திராழ்வானாகிற ஒரு யானையினிடத்து பணி,Pani - கைங்கர்யத்தை கொண்டவன்,Kondavan - ஸ்வீகரித்தருளினவனும் கஞ்சன் தன்,Kanjan Than - கம்ஸனுடைய ஒரு வாரணம்,Oru Varanam - (குவலயாபீடமென்ற) ஒரு யானையினுடைய உயிர்,Uyir - உயிரை உண்டவன்,Undavan - முடித்தவனுமான கண்ணபிரான் சென்று,Senru - எழுந்தருளி உறையும்,Uraiyum - நித்ய வாஸம் பண்ணப் பெற்ற மலை,Malai - மலையாவது: கரு வாரணம்,Karu Varanam - கறுத்ததொரு யானை, தன் பிடி,Than Pidi - தன்னுடைய பேடை யானது துறந்து ஓட,Thurandhu Oda - (பிரணய ரோஷத்தினால்) தன்னை விட்டிட்டு ஓடப்புக, (அதுகண்ட அவ்வானையானது) கடல் வண்ணன் திரு ஆணை கூற,Athukanda Avvaanaiyanadhu Kadal Vannan Thiru Aanai Koora - “கடல் போன்ற நிறமுடைய அழகர் மேலாணை” என்று சொல்ல திரியும்,Thiriyum - (அப்பேடை யானது அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு அப்புறம் போக மாட்டாமல்) மீளா நின்றுள்ள தண்,Than - குளிர்ந்த மாலிருஞ்சோலை,Maaliruncholai - திருமாலிருஞ் சோலை மலையாம். |