| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 343 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 6 | ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் மலை ஆவத்தன மென்று அமரர்களும் நன் முனிவரும் சேவித்திருக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-6 | ஏலிற்று,Elitru - (கம்ஸன்) ஏவின காரியங்களை செய்வான்,Seivaan - செய்து முடிப்பதற்காக ஏன்று எதிர்த்து வந்த,Enru Edhirththu Vanda - துணிந்து எதிரிட்டுவந்த மல்லரை,Mallarai - (சாணுரன் முதலிய) மல்லர்களை சாவ தகர்த்து,Saava Thagarththu - முடியும்படியாக நோக்கினவனும் சாந்து,Santhu - (கூனி யிட்ட) சாந்தை அணி,Ani - அணிந்து கொண்டுள்ள தோள்,Thol - தோள்களை யுடையவனும் சதுரன்,Sathuran - ஸமர்த்தனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலை,Malai - மலையாவது: அமரர்களும்,Amarargalum - (பிரமன் முதலிய) தேவர்களும் நல் முனிவரும்,Nal Munivaram - (ஸனகர் முதலிய மஹர்ஷிகளும்) ஆவத்து தனம் என்று,Aavathu Thanam Endru - ஆபத்துக் காலத்துக்குத் துணையாயிருக்குமிடமென்று (நினைத்து) சேவித்து இருக்கும்,Seviththu Irukkum - ஸேவித்துக் கொண்டு இருக்குமிடமான தென் திருமாலிருஞ்சோலை |