| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 344 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 7 | மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை கொன்னவில் கூர் வேற் கோன் நெடு மாறன் தென் கூடற்கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-7 | மன்னர்,Mannar - (குரு தேசத்து) அரசர்கள் மறுக,Maruga - குடல் குழம்பும்படி மைத்துணன் மார்க்கு,Maiththunan Maarkku - மைத்துனன்மாரான பாண்டவர்களுக்கு (த் துணையாகி) ஒரு தேரின் மேல்,Oru Therin Mel - ஒரு தேரிலே முன் அங்கு நின்று,Mun Angu Ninru - முற் புறத்திலே நின்று கொண்டு மோழை யெழுவித்தவன் மலை,Mozhai Ezhuviththavan Malai - (நீர் நரம்பில் விட்ட வாருணாஸ்த்ரத்தின் வழியே) கீழுண்டான குமிழி யெறிந்து கிளரும்படி பண்ணின கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலையாவது கொன்னவில்,Konnavil - கொலையையே தொழிலாக வுடைய கூர்,Koor - கூர்மை பொருந்திய வேல்,Vel - வேலை யுடையவனும் கோன்,Kon - ராஜ நீதியை வழுவற நடத்துமவனும் நெடு,Nedu - பெருமை பொருந்தியவனும் மாறன்,Maaran - ‘மாறன்‘ என்னும் பெயருடையவனும் தென்,Then - அழகிய கூடல்,Koodal - ‘நான் மாடக் கூடல்‘ என்ற பெயரை யுடைய மதுரைக்கு தென்னன்,Thennan - பாண்டி நாட்டுத் தலைவனுமான மலயத்வஸ ராஜனாலே கொண்டாடும்,Kondaadum - கொண்டாடப் பெற்ற தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை |