Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 345 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
345ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 8
குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச்
சிறு கால் நெறியே போக்கு விக்கும் செல்வன் பொன் மலை
அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறு காலைப் பாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-8
குறுகாத,Kurugaadha - திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற
மன்னரை,Mannarai - அரசர்களுடைய
கூடு,Koodu - இருப்பிடத்தை
கலக்கி,Kalakki - குலைத்து (அழித்து)
வெம்,Vem - தீஷணமான
கானிடை,Kaanidai - காட்டிலே
சிறு கால் நெறியே ,Siru Kaal Neriye - சிறந்த வழியில்
போக்குவிக்கும்,Pookkuvikkum - (அவ் வரசர்களை) ஓட்டுகின்ற
செல்வன்,Selvan - திருமால் (எழுந்தருளியிருக்கிற)
பொன் மலை,Pon Malai - சிறந்த மலையை யுடையவன்
அறுகால்,Arukaal - ஆறு கால்களை யுடைய
வரி வண்டுகள்,Vari Vandugal - அழகிய வண்டுகளானவை
ஆயிரம் நாமம் சொல்லி,Aayiram Naamam Solli - (எம்பெருமானுடைய) ஸஹஸ்ர நாமங்களை ஆளாத்தி வைத்து
சிறு காலைப் பாடும்,Siru Kaalaip Paadum - சிற்றஞ் சிறு காலையில் அடி பணியுமாற்றைக் கூறியவாறு பாடுமிடமான
தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை