| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 345 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 8 | குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச் சிறு கால் நெறியே போக்கு விக்கும் செல்வன் பொன் மலை அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-8 | குறுகாத,Kurugaadha - திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற மன்னரை,Mannarai - அரசர்களுடைய கூடு,Koodu - இருப்பிடத்தை கலக்கி,Kalakki - குலைத்து (அழித்து) வெம்,Vem - தீஷணமான கானிடை,Kaanidai - காட்டிலே சிறு கால் நெறியே ,Siru Kaal Neriye - சிறந்த வழியில் போக்குவிக்கும்,Pookkuvikkum - (அவ் வரசர்களை) ஓட்டுகின்ற செல்வன்,Selvan - திருமால் (எழுந்தருளியிருக்கிற) பொன் மலை,Pon Malai - சிறந்த மலையை யுடையவன் அறுகால்,Arukaal - ஆறு கால்களை யுடைய வரி வண்டுகள்,Vari Vandugal - அழகிய வண்டுகளானவை ஆயிரம் நாமம் சொல்லி,Aayiram Naamam Solli - (எம்பெருமானுடைய) ஸஹஸ்ர நாமங்களை ஆளாத்தி வைத்து சிறு காலைப் பாடும்,Siru Kaalaip Paadum - சிற்றஞ் சிறு காலையில் அடி பணியுமாற்றைக் கூறியவாறு பாடுமிடமான தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை |