| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 346 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 9 | சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள் அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாயொப்பான் சிந்தும் புறவில் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-9 | பூதங்கள்,Boothangal - ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை (தேக அபாஷணமே பண்ணிக் கொண்டு திரியும் நாஸ்திரிகர்களைக் கண்டால், அவர்களை) சிந்தப் புடைத்து,Sindhap Pudaiththu - (அவயங்கள்) சிதறும்படி அடித்துக் கொன்று செம் குருதி கொண்டு,Sem Kurudhi Kondu - (அதனால் அவர்களுடலினின்று புறப்படுகிற) சிவந்த ரத்தத்தைக் கொண்டு அந்தி,Andhi - அந்திப் பொழுதிலே பலி கொடுத்து,Pali Koduththu - (எம்பெருமானுக்கு) ஆராதந ரூபமாக ஸமர்ப்பித்து ஆபத்து தனம் செய்,Aapaththu Dhanam Sei - ஆபத் காலத்துக்குத் துணையாமிடமென்று ஸேவிக்குமிடமும் அப்பன்,Appan - ஸ்வாமி (எழுந்தருளியிருக்க மிடமுமான) மலை,Malai - மலையாவது, இந்திர கோபங்கள்,Indhira Gobangal - பட்டுப் பூச்சிகளானவை எம் பெருமான்,Em Perumaan - அனைவர்க்கும் ஸ்வாமியான அழகருடைய கனி வாய்,Kani Vaai - (கொவ்வைக்) கனி போன்ற திரு வதரத்திற்கு ஒப்பான்,Oppaan - போலியாக சிந்தும்,Sindhum - (கண்ட விடமெங்கும்) சிதறிப் பறக்கப் பெற்ற புறவில்,Puravil - தாழ்வரையை யுடைய தென் திருமாலிருஞ்சோலை.,Then Thirumaalirunjolai - தென் திருமாலிருஞ்சோலை |