திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 347 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
347பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 10
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார் விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலை வாய்த் தெட்டித் திளைக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-10
பதவுரை Show / Hide
எண்ணிறந்த,Ennirandha - எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும்
பெரு,Peru - பெருமை பொருந்தியவர்களுமான
தேவிமார்,Devimaar - தேவியானவர்கள்
எட்டு திசையும்,Ettu Thisaiyum - எட்டுத் திக்குகளிலும்
விட்டு விளங்க,Vittu Vilangha - மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே)
வீற்றிருந்த,Veeetrirundha - பெருமை தோற்ற எழுந்தருளி யிருந்த
விமலன் மலை,Vimalan Malai - நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலையானது;
பட்டி,Patti - வேண்டினபடி திரியும் மலையான
பிடிகள்,Pidigal - யானைப் பேடைகளானவை
மாலைவாய்,Maalai Vaai - இரவிலே
பகடு,Pagadu - ஆண் யானை மேல்
உரிஞ்சி சென்று,Urinji Sendru - ஸம்லேஷித்துப்போய்
தெட்டித் திளைக்கும்,Thetti Thilaikkum - அந்த ஸம்லேஷித்துப் போய் முற்றிக் களியா நிற்கும்