| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 347 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 10 | எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார் விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலை வாய்த் தெட்டித் திளைக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-10 | எண்ணிறந்த,Ennirandha - எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும் பெரு,Peru - பெருமை பொருந்தியவர்களுமான தேவிமார்,Devimaar - தேவியானவர்கள் எட்டு திசையும்,Ettu Thisaiyum - எட்டுத் திக்குகளிலும் விட்டு விளங்க,Vittu Vilangha - மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே) வீற்றிருந்த,Veeetrirundha - பெருமை தோற்ற எழுந்தருளி யிருந்த விமலன் மலை,Vimalan Malai - நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலையானது; பட்டி,Patti - வேண்டினபடி திரியும் மலையான பிடிகள்,Pidigal - யானைப் பேடைகளானவை மாலைவாய்,Maalai Vaai - இரவிலே பகடு,Pagadu - ஆண் யானை மேல் உரிஞ்சி சென்று,Urinji Sendru - ஸம்லேஷித்துப்போய் தெட்டித் திளைக்கும்,Thetti Thilaikkum - அந்த ஸம்லேஷித்துப் போய் முற்றிக் களியா நிற்கும் |