Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 347 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
347ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 10
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலை வாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-10
எண்ணிறந்த,Ennirandha - எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும்
பெரு,Peru - பெருமை பொருந்தியவர்களுமான
தேவிமார்,Devimaar - தேவியானவர்கள்
எட்டு திசையும்,Ettu Thisaiyum - எட்டுத் திக்குகளிலும்
விட்டு விளங்க,Vittu Vilangha - மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே)
வீற்றிருந்த,Veeetrirundha - பெருமை தோற்ற எழுந்தருளி யிருந்த
விமலன் மலை,Vimalan Malai - நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலையானது;
பட்டி,Patti - வேண்டினபடி திரியும் மலையான
பிடிகள்,Pidigal - யானைப் பேடைகளானவை
மாலைவாய்,Maalai Vaai - இரவிலே
பகடு,Pagadu - ஆண் யானை மேல்
உரிஞ்சி சென்று,Urinji Sendru - ஸம்லேஷித்துப்போய்
தெட்டித் திளைக்கும்,Thetti Thilaikkum - அந்த ஸம்லேஷித்துப் போய் முற்றிக் களியா நிற்கும்