திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 348 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
348பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 11
மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலை தன்னை கருதி யுறைகின்ற கார்க் கடல் வண்ண னம்மான் தன்னை விரதம் கொண்டேத்தும் வில்லி புத்தூர் விட்டு சித்தன் சொல் கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே–4-2-11
பதவுரை Show / Hide
மருதம் பொழில்,Marudham Pozhil - மருதஞ் சோலைகளை
அணி,Ani - அலங்காரமாக வுடைய
மாலிருஞ்சோலை மலை தன்னை,Maalirunjolai Malai Thannai - திருமாலிருஞ்சோலை மலையை
கருதி,Karudhi - விரும்பி
உறைகின்ற,Uraiginra - (அதில்) எழுந்தருளி யிருக்கின்ற
கார் கடல் வண்ணன்,Kaar Kadal Vannan - கருங்கடல் போன்ற நிறத்தை யுடைய
அம்மான் தன்னை,Ammaan Thannai - அழகப் பிரனாரை
விரதம் கொண்டு,Viradham Kondu - மங்கள விரதமாகக் கொண்டு
ஏத்தும்,Eaththum - துதிக்குமாறும்
வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான
விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார்.
சொல்,Sol - அருளிச் செய்த இவற்றை
கருதி,Karudhi - விரும்பி
உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள்
கண்ணன்,Kannan - கண்ண பிரானுடைய
கழல் இணை,Kazhal Inai - திருவடிகளை
காண்பர்கள்,Kaanbargal - ஸேவிக்கப் பெறுவார்கள்.