| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 348 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 11 | மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலை தன்னை கருதி யுறைகின்ற கார்க் கடல் வண்ண னம்மான் தன்னை விரதம் கொண்டேத்தும் வில்லி புத்தூர் விட்டு சித்தன் சொல் கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே–4-2-11 | மருதம் பொழில்,Marudham Pozhil - மருதஞ் சோலைகளை அணி,Ani - அலங்காரமாக வுடைய மாலிருஞ்சோலை மலை தன்னை,Maalirunjolai Malai Thannai - திருமாலிருஞ்சோலை மலையை கருதி,Karudhi - விரும்பி உறைகின்ற,Uraiginra - (அதில்) எழுந்தருளி யிருக்கின்ற கார் கடல் வண்ணன்,Kaar Kadal Vannan - கருங்கடல் போன்ற நிறத்தை யுடைய அம்மான் தன்னை,Ammaan Thannai - அழகப் பிரனாரை விரதம் கொண்டு,Viradham Kondu - மங்கள விரதமாகக் கொண்டு ஏத்தும்,Eaththum - துதிக்குமாறும் வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார். சொல்,Sol - அருளிச் செய்த இவற்றை கருதி,Karudhi - விரும்பி உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள் கண்ணன்,Kannan - கண்ண பிரானுடைய கழல் இணை,Kazhal Inai - திருவடிகளை காண்பர்கள்,Kaanbargal - ஸேவிக்கப் பெறுவார்கள். |