Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 349 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
349ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 1
உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந் தோடிச் சென்ற
உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி யாழியும் காசும் கொண்டு
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே–4-3-1
உருப்பிணி நங்கை தன்னை,Uruppini Nangai Thannai - ருக்மிணிப் பிராட்டியை
மீட்பான்,Meetpaan - கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக
தொடர்ந்து,Thodarnthu - (அத் தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு
ஓடிச் சென்ற,Odi Senra - ஓடி வந்த
உருப்பனை,Uruppanai - உருப்பன் என்றவனை
ஓட்டிக் கொண்டு இட்டு,Ottik Kondu Ittu - ஓட்டிப் பிடித்துக் கொண்டு (தேர்த் தட்டிலே) இருத்தி
உறைத்திட்ட,Uraiththitta - (அவனைப்) பரிபவப் படுத்தின
உறைப்பன் மலை,Uraippan Malai - மிடுக்கை உடைய கண்ண பிரான் (எழுந்தருளு யிருக்கிற)மலையாவது
கொன்றை,Kondrai - கொன்றை மரங்களானவை
பொருப்பு இடை நின்று,Poruppu Idai Nindru - மலையிலே நின்று
முறி,Muri - முறிந்து
பொன்,Pon - பொன் மயமான
ஆழியும்,Aazhi Yum - மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும்
காசும்,Kaasum - (பொற்காசு)போன்ற பூ விதழ்களையும்
கொண்டு,Kondu - வாரிக் கொண்டு
விருப்பொடு வழங்கும்,Viruppodu Vazhanguum - ஆதரத்துடனே (பிறர்க்குக்)கொடுப்பவை போன்றிருக்கப் பெற்ற
வியன்,Viyan - ஆச்சரியமான
மாலிருஞ்சோலை அதே,Maalirunjolai Adhe - அந்தத் திருமாலிருஞ்சோலையே யாம்.