திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 35 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
35பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 13
வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே–1-2-13
பதவுரை Show / Hide
வண்டு அமர்,Vandhu amar - வண்டுகள் படிந்திருக்கிற
பூ குழல்,Poo kuzhal - பூ அணிந்த குழலையுடையளான
ஆய்ச்சி,Aaychchi - யசோதைப் பிராட்டியானவள்
மகனாக கொண்டு,Maganaaga kondu - (தன்) புத்ரனாக ஸ்வீகரித்து
வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப் பெற்றவனாய்
கோவலர்,Kovalar - ஸ்ரீநந்தகோபருடைய
குட்டற்கு,Kuttarku - பிள்ளையான கண்ணபிரானுடைய,
அண்டமும்,Andamum - அண்டங்களையும்
நாடும்,Naadum - (அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும்
அடங்க,Adanga - முழுதும்
விழுங்கிய,Vizhungiya - (ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த
கண்டம் இருந்த ஆ,Kandam irundha a - கழுத்திருந்தபடியை