| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 350 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 2 | கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர் மா மதியை செஞ்சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே–4-3-2 | கஞ்சனும்,Kanjanum - கம்ஸனும் காளியனும்,Kaaliyanum - காளிய நாகமும் களிறும்,Kalirum - (குவலயாபீடமென்ற) யானையும் மருதும்,Maruthum - இரட்டை மருத மரங்களும் எருதும்,Eruthum - (அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும் வஞ்சனையின்,Vanjanaiyin - (தந்தாமுடைய) வஞ்சனைகளாலே மடிய,Madiya - (தாம் தாம்) முடியும்படி வளர்ந்த,Valarntha - (திருவாய்ப்பாடியில்) வளர்ந்தருளினவனும் மணி வண்ணன் மலை,Mani Vannan Malai - நீல மணி போன்ற நிறமுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கும்) மலையாவது: நஞ்சு,Nanju - விஷத்தை உமிழ்,Umizh - உமிழா நின்றுள்ள காகம்,Kaagam - (மலைப்) பாம்பானவை நளிர்,Nalir - குளிர்ந்த மா மதியை,Maa Mathiyai - (மலைச் சிகரத்தின் மேல் தவழுகின்ற) பூர்ணச்சந்திரனை,Poornachandiranai - (தமக்கு உணவாக நினைத்து) எழுந்து,Ezhnthu - (படமெடுத்துக்) கிளர்ந்து அணலி,Anali - கிட்டி செம் சுடர்,Sem Sudar - சிவந்த தேஜஸ்ஸை யுடைய நா,Naa - (தனது) நாக்கினால் அளைக்கும்,Alaikkum - (சந்திரனை) அளையா நிற்குமிடமான திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |