Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 351 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
351ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 3
மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே–4-3-3
மன்னு,Mannu - (தன்னை அழிவற்றவனாக நினைத்துப்) பொருந்திக் கிடந்த
நரகன் தன்னை ,Naragan Thannai - நரகாஸுரனை
சூழ்போகி,Soolpoghi - கொல்லும் வகைகளை ஆராய்ந்து
வளைத்து,Valaiththu - (அவனைத் தப்பிப்போக முடியாதபடி)வளைத்துக் கொண்டு
எறிந்து,Erinthu - (திரு வாழியாலே) நிரஸித்து
கன்னி மகளிர் தம்மை,Kanni Magalir Thammai - (அவனால் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்த பதினாறாயிரத் தொரு நூறு) கன்னிகளையும்
கவர்ந்த,Kavarntha - தான் கொள்ளை கொண்ட
கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறமுடையவனான கண்ண பிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை,Malai - மலையாவது:
புன்னை,Punnai - புன்னை மரங்களும்
செந்தியொடு,Sendhiyodu - சுர புன்னை மரங்களும்
புனம் வேங்கையும்,Punam Vengaiyum - புனத்திலுண்டாகிற வேங்கை மரங்களும்
கோங்கும்,Kongum - கோங்கு மரங்களும்
நின்று,Ninru - (புஷ்பங்களால் நிறைந்த ஒழுங்கு பட) நின்று
பொன்னரி மலைகள் சூழ்,Ponnari Malaigal Sool - (திருமலைக்குப்) பொன்னரி மாலைகள் சுற்றினாற் போலே யிருக்கப் பெற்ற
பொழில்,Pozhil - சோலைகளை யுடைய
மாலிருஞ்சோலை அதே,Maalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே.