Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 352 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
352ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 4
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகளிருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப்
பாவொலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே–4-3-4
மா வலி தன்னுடைய,Maa Vali Thannudaiya - மஹாபலியினுடைய
மகன் வாணன்,Mahan Vaanan - புத்திரனாகிய பாணாஸுரனுடைய
மகள் இருந்த,Magal Irundha - மகளான உஷை இருந்து
காவலை,Kaavalai - சிறைக் கூடத்தை
கட்டு அழித்த,Kattu Azhitha - அரனோடே அழித்தருளினவனும்
தனி காளை,Thani Kaalai - ஒப்பற்ற யுவாவுமான கண்ணபிரான்
கருதும் மலை,Karudhum Malai - விரும்புகிற மலையாவது;
கோவலர்,Kovalar - இடையர்களுக்கும்
கோவிந்தனை,Govindhanai - கோவிந்தாபிஷேகம் பண்ணப் பெற்ற கண்ணபிரான் விஷயமாக
குற மாதர்கள்,Kura Maathargal - குறத்திகளானவர்கள்
குறிஞ்சி மலர்,Kurinji Malar - குறிஞ்சி ராகத்தோடு கூடின
பா,Paa - பாட்டுக்களை
ஒலி பாடி,Oli Paadi - இசை பெறப் பாடிக் கொண்டு (அப் பாட்டுக்குத் தகுதியான)
நடம் பயில்,Nadam Payil - கூத்தாடுமிடமான மாலிருஞ்சோலை அதே