| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 354 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 6 | பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை பாண்டகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருக தோண்ட லுடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே–4-3-6 | பாண்டவர் தம்முடைய,Paandavar Thammudaiya - பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய) பாஞ்சாலி,Paanchaali - த்ரௌபதியினுடைய மறுக்கமெல்லாம்,Marukkam Ellam - மனக் குழப்பத்தை யெல்லாம் ஆண்டு,Aandu - (தன்) திருவுள்ளத்திற்கொண்டு, அங்கு,Angu - (அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்) நூற்றுவர் தம்,Nootruvar Tham - (துரியோதநாதிகள்) தூற்றுவருடைய பெண்டிர் மேல்,Pendir Mel - மனைவியர்களின் மேல் வைத்த,Vaitha - சுமத்தின அப்பன்,Appan - ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலை,Malai - மலையானது : பாண் தரு,Paan Tharu - பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய) வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டு திரளானவை பண்கள்,Pangal - ராகங்களை பாடி,Paadi - பாடிக் கொண்டு மது,Madu - தேனை பருக,Paruga - குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர) தோண்டல்,Thondal - ஊற்றுக்களை யுடைய மலையாகிய தொல்லை மாலிருஞ் சோலை அதே,Thollai Maaliruncholai Adhe - அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம். |