Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 355 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
355ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 7
கனங் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு வேற்றுவித்த எழில் தோள் எம்பிரான் மலை
கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலமெல்லாம்
இனம் குழு வாடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே–4-3-7
கனம்,Kanam - ஸ்வர்ண மயமான
குழையாள் பொருட்டா,Kuzhaiyaal Porutaa - காதணியை யுடையாளான
கணை,Kanai - அம்புகளை
பாரித்து,Paariththu - பிரயோகித்து
அரக்கர்கள் இனம்,Arakkargal Inam - ராஷஸ குலத்தை
கழு ஏற்றுவித்து,Kazhuertruviththu - குலத்தின் மேல் ஏற்றின வனும்
எழில் தோள்?,Ezil Thol - அழகிய தோள்களை யுடையவனுமான
இராமன்,Raaman - இராமபிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை,Malai - மலையான
கனம்,Kanam - பொன்களை
கொழி,Kozhi - கொழித்துக் கொண்டு வருகின்ற
தெள் அருவி,TheL Aruvi - தெளிந்த அருவிகளிலே
இனக்குழு,Inakuzhu - அறிஞர்கள் எல்லாம்
அகல் ஞாலமெல்லாம்,Agal Gnaalam Ellam - விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும்
வந்து சூழ்ந்த,Vandhu Soozhntha - வந்து சூழ்ந்து கொண்டு
ஆடும்,Aadum - நீராடப் பெற்ற
எழில்,Ezil - அழகிய
மாலிருஞ் சோலையிலே அதே,Maaliruncholaiyile Adhe - திருமாலிருஞ்சோலை அதே.