| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3555 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (எம்பெருமானுக்கு அடியரானாருடைய ஸம்பந்தி ஸம்பந்திகளென்று போருகிற பரம்பரையின் எல்லையில் அடிமைசெய்து நடக்கையாகிற கோட்பாடு என்னளவிலே நிற்காமல் என்னுடைய பரம்பரையிலும் வாய்க்கவேணு மென்கிறார்) 10 | வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்- பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் நீக்கமில்லா வடியார்தம் அடியார் அடியார் அடியார் எம்கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10 | Maa kaayaa poo kol meni,மா காயா பூகொள் மேனி - அழகிய காயாம்பூநிறத்தைக் கொண்ட திருமேனியையும் Naanku thol,நான்கு தோள் - நான்கு தோள்களையும் Pon aazhi kai,பொன் ஆழி கை - அழகிய திருவாழியேந்திய கையையும் உடைய Em ammaan,எம் அம்மான் - எம்பெருமானுடைய Neekkam illaa,நீக்கம் இல்லா - பிரிவு இல்லாத Adiyar tam,அடியார் தம் - அடியார்களுக்கு Adiyar adiyar adiyar,அடியார் அடியார் அடியார் - சரமாவதிதாஸ பூதர்கள் Em kookal,எம் கோக்ள் - எமக்கு ஸ்வாமிகள் Avargge,அவர்க்கே - அன்னவர்களுக்கே Kudikal aay chellum,குடிகள் ஆய் செல்லும் - சேஷவ்ருத்தி பண்ணுங்குலமாயச் செல்லும்படியான Nalla kodpaadu,நல்ல கோட்பாடு - திடமான அத்யவஸாயமானது Oozi oozii oozii thooru,ஊழி ஊழி ஊழி தோறு - எஞ்ஞான்றும் Tamiyerkku,தமியேற்கு - அடியேனுக்கு உண்டாக வேணும் |