Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 356 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
356ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 8
எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த
அரையனமரும் மலை அமரரொடு கோனும் சென்று
திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-8
எரி,Eri - நெருப்பை
சிதறும்,Sitharum - சொரியா நின்றுள்ள
சரத்தால்,Saraththaal - அம்புகளினால்
இலங்கையினை,Ilangkaiyinai - இலங்கைக் காரனான ராவணனை
தன்னுடைய,Thannudaiya - தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து,Vari Silai Vaa yil Peydhu - நீண்ட வில்லின் வாயிலே புகுரச் செய்து
காய் நோட்டம்,Kaai Nottam - (அவனுடைய) வாக்கின் அநீதியை
தவிர்த்து,Thavirthu - குலைத்து
உகந்த,Ugantha - (தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின
அரையன்,Araiyan - ஸ்வாமியான இராமபிரான்
அமரும்,Amarum - எழுந்தருளி யிருக்கிற
மலை,Malai - மலையாவது:
அமரரொடு,Amararodu - தேவர்களோடு கூட
கோனும்,Konum - (அவர்களுக்கு) தலைவனான இந்திரனும்
திரி,Thiri - (இரவும் பகலும்) திரியா நின்ற
சுடர்,Sudar - சந்த்ர ஸூர்யர்களும்
சென்று,Sendru - வந்து
சூழூம்,Soozhoom - பிரதக்ஷிணம் பண்ணப் பெற்ற
திருமாலிருஞ்சோலை மலை அதே,Thirumaaliruncholai Malai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே