| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 357 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 9 | கோட்டு மண் கொண்டிடந்து குடங்கையில் மண் கொண்டளந்து மீட்டு மதுண்டு மிழ்ந்து விளையாடு விமலன் மலை ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை யென்று ஓட்டரும் தண் சிலம்பாறுடை மாலிருஞ் சோலையதே–4-3-9 | மண்,Mann - (ஹிரண்யாக்ஷனாலே பாயாகச் சுருட்டிக் கொண்டு போகப்பட்ட) பூமியை இடந்து,Edandhu - (வராஹர மாய் அவதரித்து) (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு லிடுவித்தெடுத்து கோடு,Kodu - (தனது) திரு வயிற்றிலே கொண்டு,Kondu - என்று கொண்டும், மண்,Mann - (மஹாபலியினால் தன் வசமாக்கிக் கொள்ளப்பட்ட) பூமியை குடங் கையில்,Kudang Kaiyil - (வாமந ரூபியாய் அவதரித்து) அகங்கையில் கொண்டு,Kondu - (நீரேற்று) வாங்கிக் கொண்டு அளந்து,Alandhu - அளந்தருளியும் மீட்டும்,Meettum - மறுபடியும் (அவாந்தர ப்ரளயத்திலே அந்தப் பூமி அழியப் புக.) அது,Adhu - அப் பூமியை உண்டு,Undu - திரு வயிற்றில் வைத்து நோக்கி உமிழ்ந்து,Umizhndhu - (பிம்பு பிரளங் கழித்தவாறே) (அதனை) வெளிப் படுத்தியும் விளையாடும்,Vilaiyaadum - (இப்படிப்பட்ட ஆச்சரியச் செயல்களாலே) விளையாடா நின்றுள்ள விமலன்,Vimalan - நிர்மல ஸ்வரூபியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற) மலை,Malai - மலையாவது; ஈட்டிய,Eettiya - (பெருகி வரும் போது) வாரிக் கொண்டு வரப் பெற்ற பல் பொருள்கள்,Pal Porulgal - பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள் எம் பிரானுக்கு,Em Piraanukku - எம் பெருமானுக்கு அடியுரை என்று,Adiyurai Endru - ஸ்ரீபாத காணிக்கை யென்று ஒட்டரும்,Ottarum - (பெருகி) ஒடி வாரா நின்றுள்ள தண்,Than - குளிர்ந்த சிலம்பாறு உடை,Silambaaru Udai - நூபுர கங்கையை யுடைய மாலிருஞ் சோலை அதே,Maaliruncholai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே |