Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 358 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
358ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 10
ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக
ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை
ஆயிர மாறுகளும் சுனைகள் பல வாயிரமும்
ஆயிரம் பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே-4-3-10
ஆயிரம்,Aayiram - பலவாயிருந்துள்ள
தோள்,Thol - திருத் தோள்களை
பரப்பு,Parappu - பரப்பிக் கொண்டும்.
முடி ஆயிரம்,Mudi Aayiram - ஆயிரந் திருமுடிகளும்
மின் இசை,Min Isai - (திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும்
பை,Pai - பரந்த
ஆயிரம் தலைய,Aayiram Thalaiya - ஆயிரந்தலைகளை யுடைய
அனந்தன்,Ananthan - திருவந்தாழ்வான் மீது
சயனன்,Sayanan - பள்ளி கொண்டருளுமவனான எம்பெருமான்
ஆளும்,Aalum - ஆளுகின்ற
மலை,Malai - மலையாவது,
ஆயிரம் ஆறுகளும்,Aayiram Aarugalum - பல நதிகளையும்
பல ஆயிரம் சுனைகளும்,Pala Aayiram Sunaigalum - அனேகமாயிரந் தடாகங்களையும்
ஆயிரம் பொழிலும் உடை,Aayiram Pozhilum Udai - பல பூஞ்சோலைகளையுமுடைய