| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 359 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 11 | மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடலமுதை மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளில் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே–4-3-11 | மாலிருஞ்சோலை என்னும்,Maaliruncholai Ennum - திருமாலிருஞ்சோலை என்கிற மலையை,Malaiyai - திருமலையை உடைய,Udaiya - (தனக்கு இருப்பிடமாக) உடையவனும் மலையை,Malaiyai - ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும் கால் இரு மூர்த்தி தன்னை,Kaal Iru Moorththi Thannai - திருவஷ்டாக்ஷர ஸ்வரூபி யானவனும் நால் வேதம் கடல் அமுதை,Naal Vedham Kadal Amudhai - நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும் மேல் இருங் கற்பகத்தை,Mel Irung Karppagaththai - (ஸ்வர்க்க லோகத்திலுள்ள கல்ப வ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்பங்ருஷமாயிருப்பவனும் வேதாந்தம்,Vedhaantham - வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற விழுப்பொருளில்,Vizhupporulil - சிறந்த அர்த்தங்களுள் மேல் இருந்த,Mel Irundha - மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும் விளக்கை,Vilakkai - தனக்குத் தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் விரித்தன,Viriththana - அருளிச் செய்தவை இப் பாசுரங்கள். |