Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 360 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
360ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 1
நாவ காரியம் சொல்லிலாதவர் நாள் தொறும் விருந் தோம்புவார்
தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத அப்
பாவ காரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான் கொலோ–4-4-1
நாவ காரியம்,Naava Kaariyam - நாவினாற் சொல்ல வொண்ணாத வற்றை
சொல்லில்லாதவர்,Sollillaadhavar - (ஒருநாளும்) சொல்லி யறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள்
நாள் தோறும்,Naal Thorum - நாடோறும்
விருந்து ஓம்புவார்,Virundhu Ombuvaar - (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டும்
தேவர் காரியம் செய்து,Thevar Kaariyam Seidhu - பகவதாராதநம் பண்ணிக் கொண்டும்
வேதம்,Vedham - வேதங்களை
பயின்று,Payindru - ஓதிக் கொண்டும்
வாழ்,Vaal - வாழுமிடாமன
திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்,)
மூவர்,Moovar - பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய
காரியமும்,Kaariyamum - காரியங்களையும்
திருத்தும், Thiruththum - செய்து தலைக் கட்டுமவனும்.
முதல்வனை,Mudhalvanai - (எல்லார்க்கும்) தலைவனுமான எம்பெருமானை
சிந்தியாத,Sindhiyaadha - நெஞ்சாலும் நினையாத
அ பாவ காரிகளை,A Paava Kaariigalai - அப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை
படைத்தவன்,Padaiththavan - ஸ்ருஷ்டித்தவன்
எங்ஙனம்,Engnganam - எதுக்காக
படைத்தான் கொல் ஓ,Padaiththaan Kol O - ஸ்ருஷ்டித்தானோ! (அறியோம்)