திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 360 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
360பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 1
நாவ காரியம் சொல்லிலாதவர் நாள் தொறும் விருந் தோம்புவார் தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர் மூவர் காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத அப் பாவ காரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான் கொலோ–4-4-1
பதவுரை Show / Hide
நாவ காரியம்,Naava Kaariyam - நாவினாற் சொல்ல வொண்ணாத வற்றை
சொல்லில்லாதவர்,Sollillaadhavar - (ஒருநாளும்) சொல்லி யறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள்
நாள் தோறும்,Naal Thorum - நாடோறும்
விருந்து ஓம்புவார்,Virundhu Ombuvaar - (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டும்
தேவர் காரியம் செய்து,Thevar Kaariyam Seidhu - பகவதாராதநம் பண்ணிக் கொண்டும்
வேதம்,Vedham - வேதங்களை
பயின்று,Payindru - ஓதிக் கொண்டும்
வாழ்,Vaal - வாழுமிடாமன
திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்,)
மூவர்,Moovar - பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய
காரியமும்,Kaariyamum - காரியங்களையும்
திருத்தும், Thiruththum - செய்து தலைக் கட்டுமவனும்.
முதல்வனை,Mudhalvanai - (எல்லார்க்கும்) தலைவனுமான எம்பெருமானை
சிந்தியாத,Sindhiyaadha - நெஞ்சாலும் நினையாத
அ பாவ காரிகளை,A Paava Kaariigalai - அப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை
படைத்தவன்,Padaiththavan - ஸ்ருஷ்டித்தவன்
எங்ஙனம்,Engnganam - எதுக்காக
படைத்தான் கொல் ஓ,Padaiththaan Kol O - ஸ்ருஷ்டித்தானோ! (அறியோம்)