Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 362 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
362ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 3
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழலெழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர்த் திரு மாலவன் திரு நாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவளம் உந்து கின்றார்களே–4-4-3
நல் வண்ணம்,Nal Vannam - நல்ல நிறத்தை யுடைய
மணியும்,Maniyum - ரத்நங்களையும்
மரகதமும்,Maragathamum - மரகதகங்களையும்
அழுத்தி,Azhuthi - (ஒழுங்கு பட) இழைத்ததனால்
நிழல் எழும்,Nizhal Ezhum - ஒளி விடா நின்றுள்ள
திண்ணை,Thinnai - திண்ணைகளாலே
சூழ்,Sool - சூழப் பெற்ற
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருக்கிற)
திருமால் அவன்,Thirumaal Avan - திருமாமகன் கொழுநனுடைய
திரு நாமங்கள்,Thiru Naamangal - திரு நாமங்களை
எண்ண,Enna - (ஒன்று, இரண்டு என்று எண்ணுகைக்கா
கண்ட,Kanda - படைக்கப் பட்ட
விரல்களால்,Viralgalal - விரல்களாலே (அந்தத் திருநாமங்களை)
இறை பொழுதும்,Irai Pozhuthum - க்ஷண காலமும்
எண்ண இலாது,Enna Ilaadhu - எண்ண மாட்டாமல்
போய்,Poi - புறம்பே சென்று
உண்ணக் கண்ட,Unnak Kanda - (சரீர போஷணார்த்தமாக) உண்ணா நின்ற
தம்,Tham - தங்களுடைய
நம் ஊத்தை வாய்க்கு,Nam Ooththai Vaikku - அசுத்தமான வாயிலே
கவளம்,Kavalam - சோற்றுத் திரள்களை
உந்துகின்றார்களே,Undhugindraargale - (அவ் விரல்களினால்) தள்ளா நின்றார்களே! (இதென்ன கொடுமை.!)